கியூபாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயால் 2,200 ஏக்கர் வனப்பகுதி நாசம்.. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் வீரர்கள்..!

கரீபிய நாடான கியூபாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

ஹோல்குயின் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை பரவிய காட்டுத் தீ சுமார் 2 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில், பற்றி எரிந்து வருகிறது.

கியூபா பாதுகாப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும், வானம் செந்நிறமாகவும் காட்சியளித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.