“குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்” – முதலமைச்சர் அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை எப்போது வழங்கப்படும் என, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சம்பத் நகரில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, திறந்த வாகனத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு, வரும் மார்ச் மாத நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் முதலமைச்சர் பதிலளித்தார். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.