திருச்சி : 16 வயது சிறுமியை கர்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வி. துறையூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், பாலசுப்ரமணியன் லால்குடி அருகே கூலி வேலை செய்து வரும் 16 வயது சிறுமியோனிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி பழகி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பாலசுப்ரமணியன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால், கர்ப்பம் அடைந்த அந்த சிறுமி பாலசுப்பிரமணியனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார், 

அதற்கு பாலசுப்புரமணியன் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஒரு வாரமாக அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதற்கிடையே அந்த சிறுமி பாலசுப்பிரமணியன் குறித்து விசாரணை செய்ததில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த சிறுமி சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது பாலியல் வன்கொடுமை என்பதால் சம்பவம் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் படி, போலீசார் பாலசுப்ரமணியனைப் பிடித்து விசாரணை செய்ததில், இவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அதன் பின்னர் போலீசார் பாலசுப்ரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.