2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

2 நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்துக்கு இன்று காலை வந்த அவருடன் ஜெர்மனியை சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுவும் வந்தது.

இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜெர்மனி பிரதமருக்கு பாரம்பரிய முறையிலான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனி பிரதமரை நேரில் வரவேற்று, மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனி பிரதமர், தனது பயணத்தின்மூலம் இந்தியா- ஜெர்மனி இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.