மீண்டும் போலீஸ் கதையை கையில் எடுக்கும் ஹரி

அருண் விஜய் நாயகனாக நடித்த யானை படத்தை அடுத்து விஷாலை வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறார் ஹரி. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை படங்களில் நடித்த விஷால் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைகிறார். இதற்கு முன்பு விக்ரம் நடித்த சாமி, சாமி 2 மற்றும் சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் படங்களின் மூன்று பாகங்களையும் போலீஸ் கதையில் இயக்கிய ஹரி, தற்போது விஷாலை வைத்து இயக்கும் புதிய படத்தையும் போலீஸ் கதையிலேயே இயக்கப் போகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.