அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சுவாமி கோவில் பச்சை குடில் திருவிழா.. 101 கிடாக்கள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சுவாமி கோவில், கிடாவெட்டு விழாவில் நடைபெற்ற அசைவ அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இக்கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பச்சை குடில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவின் நிறைவாக, நள்ளிரவு 101 ஆட்டுக்கிடாக்கள் வெட்டப்பட்டு பெரிய பாத்திரங்களில் கரி விருந்து தயாரிக்கப்பட்டு, திருபுவனத்தில் 4 ரத வீதிகளின் இருபுறமும் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்த பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.