கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது ராஜஸ்தானில் 12 தமிழக போலீசார் கைது

அஜ்மீர்: தமிழகத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுமார் ரூ.52  லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் பைருகேடாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்வதற்காக திருச்சி போலீஸ் அதிகாரி மோகன் தலைமையிலான தமிழ்நாடு தனிப்படை போலீசார் 12 பேர் ராஜஸ்தானில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க ெசன்ற இடத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக போலீசார் 12 பேரை அம்மாநில போலீசார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து ராஜஸ்தான் போலீசார், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் முழு ஆவணங்களையும் தமிழக காவல்துறையிடம் அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.