சேலம் பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை தலைவரை கைது செய்ய தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவு..!

நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத் தலைவரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியில் இருந்த தெய்வராணி என்பவர் நிர்வாகம் மூலமாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தெய்வராணிக்கு மீண்டும் பணி வழங்க 2021ல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுவரை தெய்வராணியை பணியில் சேர்த்துக் கொள்ளாததால் தெய்வராணி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி தற்போது கணினி அறிவியல் துறை தலைவராக உள்ள முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை கைது செய்ய உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.