நலன்புரி கொடுப்பனவுகளுக்காக ,சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள்………..

நலன்புரி கொடுப்பனவுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஆராயப்பட்டுவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நலன்புரி உதவிகளை பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. நலன்புரி கொடுப்பனவுகளை கோரி 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்வதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ,நலன்புரி கொடுப்பனவை விரைவில் மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். விண்ணப்பதாரிகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகாரிகள் வீடுகளுக்கு வருகை தரவுள்ளவுள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.