அதிவேகத்தில் வந்த காரும் – அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கேரளாவின் பத்தனம்திட்டாவில், முன்னால் சென்ற காரை முந்த முயன்று, எதிரே வந்த மற்றொரு காரின் மீது அதிவேகமாக மோதிய அரசுப்பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தேவாலயத்தின் சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

கோநி – பள்ளிப்பாடி அருகே, வளைவு சாலையில் அதிவேகமாக சென்ற அரசுப்பேருந்து, முன்னால் சென்ற காரை முந்த முயன்றது.

அப்போது, எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதிய பேருந்து, அருகில் இருந்த தேவாலயத்தின் சுற்றுச் சுவர் மீது மோதி நின்றது.

இதில், ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.