இந்த தேதி முன்பாக வகுப்புகளை தொடங்க கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை :

சி.பி.எஸ்.இ. செயலர் அனுராக் திரிபாதி அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சில பள்ளிகள் இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏற்கெனவே தொடங்கி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள், அதிகசுமை மற்றும் மனச்சோா்வு போன்ற பாதிப்புகளை மாணவா்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கும்.

அதோடு, வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித் திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற பாடம் சாராத நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபட முடியாத நிலையும், அதற்கு போதிய அவகாசம் கிடைக்காத நிலையும் உருவாகும். இந்த பாடம் சாராத நடவடிக்கைகளும் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமானவையாகும்.

எனவே, வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வர்கள் தவிர்க்க வேண்டும். வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மாா்ச் 31-ல் நிறைவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று அவர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தற்போது சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10-ம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் 21-ம் தேதியும், 12-ம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப்ரல் 5-ம் தேதியும் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.