பேசிக் கொண்டிருக்கும் போதே போனை துண்டித்த கணவர் – விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் நகரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர், அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். இவரும் பல்லலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அனிதா குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு நீண்ட நேரம் ஆகியும் கணவர் சதாசிவம் வீட்டுக்கு வராததால் அனிதா, அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது போனில் பேசிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையிலசதாசிவம் போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
image
இதனால் ஆத்திரமடைந்த அனிதா, திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார், சிதறிக் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.