13-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை.! காரணம்? போலீசார் விசாரணை

அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9வது தளத்தில் வசித்து வந்தவர் சம்பத் (36). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து சம்பத் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பத்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.