ஜெகதீப் தன்கர், கிரண் ரிஜிஜுக்கு எதிராக வழக்கு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஒன்றிய  சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகவும், நீதித்துறை மற்றும் கொலிஜியம் பற்றியும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு மும்பை வக்கீல் சங்கத்தினர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர். அதில்   தன்கரையும்,  கிரண் ரிஜிஜூவையும் பதவி நீக்க வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.