சமைக்காததால் மனைவியை அடித்தே கொன்ற கணவன்!!

வீட்டில் உணவு சமைக்காத மனைவியைக் கணவன் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த பஜ்ரங்கி குப்தா – ப்ரீத்தி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் ப்ரீத்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே, அவர் வீட்டு வேலைகள் செய்வதில் சிரமப்பட்டு வந்துள்ளார்.

அவரது கணவர் பஜ்ரங்கி குப்தா மனைவிக்கு உதவியாக இல்லாமல் சோம்பேறி என திட்டி வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்து விட்டு பஜ்ரங்கி குப்தா இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது உணவு எதுவும் சமைக்கப்படாததால் ஆத்திரமடைந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து மனைவியைத் தாக்கியுள்ளார்.

பலத்த காயம் அடைந்த ப்ரீத்தி சரிந்து விழுந்தார். இதையடுத்து உறவினர்கள் அப்பெண்ணை அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ப்ரீத்தியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பஜ்ரங்கி குப்தாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.