Vijay Yesudas: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய் யேசுதாஸ் வீட்டிலும் நகைகள் கொள்ளை.. பரபரப்பு!

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ். இவரது மகன் விஜய் யேசுதாஸ். இவர் பிரபல பாடகராகவும் நடிகராகவும் உள்ளார். விஜய் யேசுதாஸ் சென்னை அபிராமிபுரத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். தனுஷின் மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமானார்.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Viduthalai Review: இந்திய சினிமா கண்டிராத ஒன்று… விமர்சகர்களின் பாராட்டு மழையில் விடுதலை!

ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார் விஜய் யேசுதாஸ். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து சுமார் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா, அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார் தர்ஷணா பாலா. மேலும் தனது வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

Ponniyin Selvan 2: ‘பொன்னியின் செல்வன் 2’ பேரழகி குந்தவையாக த்ரிஷா.. அசத்தல் க்ளிக்ஸ்!

இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விஜய் யேசுதாஸ் வீட்டின் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் யேசுதாஸ், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நெருங்கிய நண்பராவார். சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் இருந்த தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனதாக புகார் அளித்தார். இதையடுத்து அவரது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோர் நகைகளை திருடியது தெரியவந்தது.

Aishwarya Rajinikanth: மொத்தம் 200 பவுன் நகைய காணோம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்!

அவர்களிடம் இருந்து 150 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து 200 பவுன் நகைகள் காணாமல் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீஸில் புதிய புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போய் இருப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.