கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் உடல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கல்லூரி மாணவியின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சுவேதா என்ற அந்த மாணவியின் உடல், சாக்குப் பையில் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. அவரை தற்கொலைக்குத் தூண்டி, சடலத்தை மறைத்ததாக காதலன் லோகேஷ் கைது செய்யப்பட்டார்.

சடலத்தை லோகேஷ் மட்டுமே மூட்டையாகக் கட்டிக் கொண்டுவந்து கிணற்றில் வீசியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவனுடன் மேலும் சிலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டிய மாணவியின் உறவினர்கள் முதலில் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தற்கொலை வழக்காக மாற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.