“அதிமுக பொதுச்செயலாளராக தான் தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” – இ.பி.எஸ் அறிக்கை!

அதிமுக பொதுச் செயலாளராக தாம் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கிளைச் செயலாளாராக தொடங்கிய தனது அரசியல் பயணத்தில் உழைப்பை அங்கீகரித்து பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும், நாட்டின் கடைசி மனிதனுக்கும் அதிகாரத்தில் பங்கு உண்டு என்பதை அதிமுக செயல்படுத்தி காட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிறப்பின் அடிப்படையில் தலைமையைத் தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்பதில் தான் பெருமிதம் அடைவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.