அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றிய அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர்

வெளியிட்டுள்ளார்.

அவசர செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் மாநில மாநாடு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அந்தவகையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநில மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மாநில மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 20ஆம் தேதி தான் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

அதிமுக் பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைவிட்ட நிலையில், பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பும் ஓபிஎஸ் தரப்பை அப்செட் ஆக்கியது.

இதனால் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்த நிலையில் அது தொடர்பான இறுதி விசாரணை ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் 24ஆம் தேதியும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.