Leo Film: ஒன்னு இல்ல இரண்டு சூப்பர் அப்டேட் கொடுத்த விஜய்யின் லியோ பட தயாரிப்பாளர்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. லியோ படம் பற்றி எந்த தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் லோகேஷ் மிகவும் கவனமாக இருக்கிறார்.

காமெடி நடிகர் செந்திலுக்கு பீமரத சாந்தி திருமணம் !
மேலும் படக்குழுவை சேர்ந்த யாரும் எதுவும் வெளியே சொல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தான் படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் சூப்பரான அப்டேட் கொடுத்திருக்கிறார்.

Vijay: உங்களை பார்க்கணும்ணானு வீட்டு வாசலில் அழுத மாணவிக்கு போன் செய்து பேசிய விஜய்

லியோவை பான் இந்திய படமாக உருவாக்க வேண்டும் என்று கூறியபோது அதெல்லாம் தேவை இல்லாதது, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக மட்டும் எடுத்தால் போதும் என்றாராம் விஜய். ஆனால் லலித் குமாரும், ஜெதீஷும் வலியுறுத்திய பிறகு ஓகே என்று சொல்லியிருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதையடுத்து லியோ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. லியோ அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என லலித் குமார் தெரிவித்துள்ளார்.

லியோ பற்றி ஏதாவது அப்டேட் கிடைத்துவிடாதா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இந்த தகவல் அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது. லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு வேண்டாம் என்று கூறிவிட்டாராம் விஜய்.

என் பட விழாக்கள் நேரு உள்விளையாட்டரங்கில் தான் நடந்து வருகிறது. தென் தமிழகத்தில் இருக்கும் என் ரசிகர்களை சந்திக்க விரும்புகிறேன். அதனால் லியோ விழாவை தென் தமிழ்நாட்டில் நடத்தலாம் என்றாராம். இந்த தகவலையும் லலித் குமார் தான் வெளியிட்டார். லியோ இசை வெளியீட்டு விழா மதுரை, திருச்சி அல்லது கோவையில் நடக்குமாம்.

BlueTick: ட்விட்டரில் ப்ளூ டிக்கை இழந்த ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ்: சூர்யாவுக்கு மட்டும் இருக்குபா

இதற்கிடையே லியோ படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துவிட்டு பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் த்ரிஷா. அவர் செல்லும் இடமெல்லாம் மேடை ஏறியதுமே லியோ, லியோ, லியோ என ரசிகர்கள் கோஷமிடுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக கொச்சிக்கு சென்றார் த்ரிஷா. கேரளாவில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் த்ரிஷா மேடைக்கு வந்ததுமே சேட்டன்மார்கள் எல்லாம் லியோ, லியோ, லியோ என்று கூற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவருக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை.

யார் அந்த லியோ, த்ரிஷா வந்ததும் ஏன் கத்துகிறார்கள் என்று நினைத்தார். த்ரிஷா விவரித்த பிறகே லியோ படம் என்பது அவருக்கு புரிய வந்தது. லோகேஷ் கனகராஜ் உத்தரவிட்டிருப்பதால் லியோ பற்றி த்ரிஷா எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை.

படப்பிடிப்பு நன்றாக நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் லியோ ரிலீஸாகும் என்றார். அதை கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரோ, அக்டோபரில் லியோவை விளம்பரம் செய்ய த்ரிஷா வருவார். அப்பொழுது அவரிடம் லியோ பற்றி கேட்கலாம். தற்போது பொன்னியின் செல்வன் 2 படம் பற்றி பேசுவோம் என்று கூறி ரசிகர்களை சமாதானம் செய்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.