19 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி..!

எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்ததையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் டெல்லி துக்ளக் லேனில் அவர் வசித்துவந்த அரசு பங்களாவை ஒரு மாதத்தில் காலி செய்யும்படி நோட்டிஸ் வழங்கப்பட்டது. அதன்படி அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து புறப்படும்போது பணியாளர்களிடம் கைகொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, 19 ஆண்டுகளாக இந்த வீட்டை தனக்கு கொடுத்த மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புவதாகவும், உண்மையைப் பேசுவதற்கான விலை இதுதான் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.