கொரோனா மரணத்தை கட்டுப்படுத்திய ''டீ, இட்லி, மஞ்சள்''.. இந்தியாவை பார்த்து வியக்கும் உலகநாடுகள்!

உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று பல லட்சம் உயிர்களை காவு வாங்கியிருந்தும் மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவின் இறப்பு விகிதம் குறைவாக இருந்ததற்கு இட்லி, டீ, மஞ்சள் ஆகிய உணவு பொருட்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
உலக மக்களை பெரும் உயிர் சேதத்துக்கு தள்ளிய கொரோனாவால் உலகளவில் 68.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 11.5 லட்சம் பேரும், இந்தியாவில் 5.31 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும், இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வை ஜோர்டான், சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் ஐசிஎம்ஆர் முன்னாள் தலைவர் நிர்மல் குமார் கங்குலி ஆகியோர் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்தாலும் அந்த நாடுகளில் கோவிட் நோய்த்தொற்றால் பலர் இறந்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் கணிசமான அளவில் மக்கள்தொகை இருந்தும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு முதன்மையான காரணங்கள் இந்திய உணவு கலாச்சாரம் மற்றும் உணவு பழக்கம்தான் என அதில் தெரிய வந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

மற்ற நாடுகளைவிட இந்தியாவில் குறைவான கொரோனா உயிரிப்புகளுக்கான காரணம் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மேற்கத்தியர்களை விட இந்தியர்கள் இறைச்சியை 20 மடங்கு குறைவாக சாப்பிடுகின்றனர். அவர்கள் இந்தியர்களை விட அதிக பால், மீன், மது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்கிறார்கள். இந்தியர்கள் ஒரு நாளைக்கு 1.2 கிராம் தேநீர் உட்கொள்கிறார்கள். இது மேற்கத்தியர்களை விட 4 மடங்கு அதிகம்.

மேலும், 4 மடங்கு அதிகமாக காய், கனிகளை சாப்பிடுகிறார்கள். தினசரி உணவில் மருத்துவம் நிறைந்த மஞ்சளை 2.5 கிராம் அளவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இதன் விளைவாக இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கூடுதல் வியப்பாக இந்த ஆய்வில் இட்லியும் உயிரிழப்பு குறைவுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. மஞ்சள் பயன்படுத்தி தயார் செய்யப்படும் சாம்பாரை இட்லிக்கு புழுஞ்சி அடித்து தள்ளினால் உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்க…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.