ChatGPT வருகை; AI படிப்பிற்கு செம மவுசு… அதுவும் 8,500 சீட்கள்… தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சாட் ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்பத்தின் வருகை இணைய உலகை புரட்டி போட்டுள்ளது. நாம் எதிர்பார்க்கும் பல விஷயங்களை வெறும் சாட் பாக்ஸில் பெற்றுவிட முடியும். வருங்காலம் ChatGPT மற்றும் அதனை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியை சார்ந்தே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. முன்னதாக இளங்கலை படிப்பில் இத்தகைய ஸ்பெஷலைசுடு படிப்புகளின் மீது பெரிதாக ஆர்வம் இருக்காது. மேற்படிப்பில் ஒரு பாடமாக படித்து கொள்ளலாம் என்று விரும்புவர்.

Digital உலகத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற மாறி Computer Science குரூப்பை படிப்பது எப்படி?

செயற்கை நுண்ணறிவு படிப்புகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மனநிலை மாறியுள்ளது. அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப கற்றலை விரும்புகின்றனர். அதுவும் செயற்கை நுண்ணறிவு படிப்பை முடித்து விட்டால் ஐடி அப்ளிகேஷன்ஸ் தொடர்பாக அனைத்து நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுதொடர்பான படிப்பின் மீதும் தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய படிப்புகளை தேர்வு செய்ய மாணவர்கள் பலரும் திட்டமிட்டுள்ளனர்.

பொறியியல் கல்லூரிகள் ஆர்வம்

வரும் 2023-24ஆம் கல்வியாண்டில் மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்காக 8,490 இடங்களை புதிதாக சேர்க்க தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. அதேசமயம் சிவில், மெக்கானிக்கல் படிப்புகளில் 2,946 இடங்களையும், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளில் 750 இடங்களையும் குறைக்க திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில், வரும் கல்வியாண்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்புகளை சேர்க்க 134 கல்லூரிகள் விண்ணப்பம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், இயந்திர கற்றல், சைபர் பாதுகாப்பு ஆகிய படிப்புகளின் மீது மாணவர்களுக்கு பெரிதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இத்தகைய படிப்புகளில் நிபுணத்துவம் பெறுவதற்கு பலரும் விரும்புவர். இந்த படிப்புகளை கல்லூரிகளில் சேர்க்க AICTE-ம் ஊக்கப்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

பேராசிரியர்களுக்கு சிக்கல்

இதில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. தற்போது பல தனியார் கல்லூரிகளில் கணினி அறிவியல் பாடத்தை சொல்லி தருவதற்கே பேராசிரியர்கள் இல்லை. இதில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், சைபர் பாதுகாப்பு போன்ற பாடத்திட்டங்கள் வந்துவிட்டால் பேராசிரியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். டாப் அளவில் இருக்கும் கல்லூரிகள் அதிக சம்பளம் கொடுத்து பேராசிரியர்களை பணியில் அமர்த்திக் கொள்ளும்.

அரசுகள் முன்வர வேண்டும்

ஆனால் மற்ற கல்லூரிகளில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய தயங்குவர். எனவே வெறும் படிப்பு மட்டுமே இருக்கக்கூடும். சொல்லித் தர பேராசிரியர்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படும் சூழல் வரலாம். இந்த துறைகளில் பயிற்சி பெற்ற திறன் வாய்ந்த பேராசிரியர்கள் உருவாகும் சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.