சைலேந்திரபாபுவுக்கு ஸ்டாலின் கொடுக்கும் கிஃப்ட்: ஜூலை 1 முதல் வரும் மாற்றம்?

தமிழ்நாடு டிஜிபியாக பணியாற்றி வரும் சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. டிஜிபி பதவியில் அமர்வதற்கு தகுதியான நபர்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். உள்துறை அமைச்சகம் மூன்று பேரின் பெயரை அனுப்ப மாநில அரசு அந்த மூரில் ஒருவரை தேர்வு செய்வார்கள். இந்த பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாள்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

தலைமைச் செயலாளர் இறையன்புவின் பணிக்காலமும் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் ஓய்வுக்குப் பின்னர் பணியாற்றும் வகையில் ஸ்டாலின் கொடுத்த ஆஃபரை இறையன்பு மறுத்துவிட்டார். இதனாலே தலைமை தகவல் ஆணையர் பதவி சமீபத்தில் நிரப்பப்பட்டது.

சைலேந்திரபாபுவின் திறமையையும், அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியை ஸ்டாலின் வழங்க உள்ளதாக கோட்டை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

மாணவர்களை, இளைஞர்களை தனது பேச்சால் ஊக்கப்படுத்தும் சைலேந்திரபாபு, நிர்வாகத் திறைமையும் மிக்கவர். எனவே அவர் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று முதல்வர் தரப்பு கருதுகிறதாம்.

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் பொறுப்பு கடந்த ஓராண்டாக நிரப்பப்படாமல் செயல்பட்டு வருகிறது. டிஎன்பிசி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.