திருச்சி அருகே பயங்கர விபத்து.. அரசு பஸ் – கார் நேருக்கு நேர் மோதல்.. 5 பேர் பலி

திருச்சி:
திருச்சி அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி இன்று மாலை அரசு பேருந்து ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. 25-க்கும் மேற்பட்டோர் அந்தப் பேருந்தில் இருந்தனர். இந்நிலையில், மணப்பாறை அருகே கல்கொத்தனூர் பகுதியில் சென்ற போது, எதிரே தறிகெட்டு வந்த கார், பேருந்து மீது மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் முழுவதுமாக நசுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.