ரெட் அலர்ட்… கேரளாவை புரட்டிப்போடும் பருவமழை… 3 மாவட்டங்களில் விடுமுறை!

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் 2 மாவட்டங்களில் அதி தீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட இந்த ஆண்டு நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பல மாநிலங்களில் வீசிய வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால் பருவமழை எப்போது தொடங்கும்? வெயிலின் தாக்கத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என காத்திருந்தனர் மக்கள்.ஜூன் 8 ஆம் தேதிஇந்நிலையில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவ மழை இந்த ஆண்டு தாமதமாக 8 ஆம் தேதி தொடங்கியது. குமரி முனை மற்றும் கேரள கடலோர பகுதிகளில் தொடங்கிய பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் பரவியது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வாரம் கன மழை முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பல்வேறு மாவட்டங்களில் விடுக்கப்பட்டு வந்தது.

​ திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்… சென்னையில் இருந்து இனிமே எவ்ளோ நேரம் தெரியுமா?​கேரளாவுக்கு ரெட் அலர்ட்இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் ரெட் அலர்ட் எனும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று கன மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் 4ஆம் தேதியான இன்று இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்மேலும் கேரள மாநிலத்தில் மீதமுள்ள 12 மாவட்டங்களில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய 2 மாவட்டங்களை தவிர பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, மற்றும் காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதன்கிழமையும் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.​ செல்பி பிரியர்களுக்கு அதிர்ச்சி… ரயில்வே போலீஸ் அதிரடி வார்னிங்!​
சிறுமி உயிரிழப்புஇதனிடையே அதிதீவிர மழை காரணமாக எர்ணாக்குளம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பெய்த கனமழையால் 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். பள்ளியில் மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மக்கள் விழிப்புடன் இருக்கவும், ஆறுகளுக்கு அருகில் செல்வதையும், மலைப்பாங்கான பகுதிகளுக்குச் செல்வதையும், கடற்கரைக்குச் செல்வதையும் தவிர்க்குமாறு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
மீட்புகுழுக்கள் தயார்
மேலும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் செயல்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இடுக்கி, பத்தனம்திட்டா, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் அவசரகால பயன்பாட்டுக்காக NDRF இன் ஏழு குழுக்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கைரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும என்பதையும் குறிக்கும். மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரை கனமழையை குறிக்கும். கடந்த் மாதம் பருவமழை பற்றாக்குறையை சந்தித்த நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே கேரளாவில் பருவ மழை தீவிரம் காட்டி வருகிறது. இதனால் பற்றாக்குறை விரைவில் சமன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.