"எப்போதுமே இந்திய அணியை தன் வீட்டிற்கு அழைப்பார்!"- கிறிஸ் கெயில் குறித்து நெகிழ்ந்த விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இதில் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 12-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸில் இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் கிறிஸ் கெயிலின் சொந்த ஊரான ஜமைக்காவில் எந்த ஒரு போட்டியும் நடைபெறவில்லை.

விராட் கோலி – கிறிஸ் கெயில்

இந்நிலையில் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விராட் கோலியிடம், “கிறிஸ் கெயிலை இங்குச் சந்திப்பதற்கான திட்டம் இருக்கிறதா?” என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த விராட் கோலி, “பல வருடங்களாக நான் அவருடன் பழகி வருகிறேன். கண்டிப்பாக கிறிஸ் கெயிலைச் சந்திப்போம் என்று நம்புகிறேன். அவர் எப்போதுமே இந்திய அணியை தன் வீட்டிற்கு அழைப்பார்.

கடந்த முறை அவருடைய வீட்டிற்குச் சென்றபோது கூட நாங்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தோம். அவர் ஓர் எளிமையான மனிதர். அவர் இம்முறை ஊரிலிருந்தால் நிச்சயம் அவரைச் சந்திப்போம்” என்று பதிலளித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.