Maaveeran: வெறும் 1000 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு மாவீரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன்.நெகிழ்ச்சியாக பேசிய தயாரிப்பாளர்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அஸ்வினின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க மிஸ்கின் வில்லனாக நடித்துள்ளார். முற்றிலும் வித்யாசமான காம்போவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

யோகிபாபுவை நாயகனாக வைத்து மண்டேலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய

அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்றதுமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதையடுத்து இப்படம் வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல் சற்று வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ளது.

எதிர்பார்ப்பில் மாவீரன்

இது இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போதே நமக்கு தெரியவந்தது. இதையடுத்து இப்படத்தில் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான ரோலில் நடித்துள்ளார். இவ்வாறு இப்படத்தில் பல சிறப்பான அம்சங்கள் நிறைந்துள்ளதால் இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரம் முதல் ரசிகர்கள் வரை அனைவரிடமும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

Vijay; சினிமாவில் இரண்டே ஜாதிகள் தான் இருக்கின்றன..பரபரப்பை கிளப்பிய விஜய் பட இயக்குனர்..!

இந்நிலையில் மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழுவினர் தற்போது தீவிரமாக ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் கேரளா, ஆந்திரா என பல மாநிலங்களுக்கு சென்று சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் அனைவரும் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

நெகிழ்ச்சியான தயாரிப்பாளர்

இந்நிலையில் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் மாவீரன் படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா. அதாவது மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் முன்பணமாக வாங்கிக்கொண்டு நடித்தாராம். ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு மாவீரன் படத்தை துவங்கும்படி சிவகார்த்திகேயன் என்னிடம் கூறினார் என்றார் அருண் விஸ்வா.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

புதுமுக தயாரிப்பாளரிடம் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் நடந்துகொண்ட விதம் கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது. சிலர் முன்பணமாகவே பல கோடிகளை வாங்கிவரும் நிலையில் புதுமுக தயாரிப்பாளரை ஊக்குவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் இவ்வாறு நடந்துகொண்டது பெரிய விஷயம் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.