ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 பேருக்கு நியமனம்

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமன கடிதங்களை வழங்கியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஆங்கில டிப்ளோமாதாரிகள் கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தமது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.