இன்னைக்கும் நாளைக்கும் நல்ல சான்ஸ் இருக்கு… சென்னை ரெய்ன்ஸின் மழை அப்டேட்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில், மழை என மாறி மாறி இருந்து வருகிறது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து கேரளாவை ஒட்டிய தமிழக பகுதிகளில் கனமழை கொட்டியது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து.

மேலும் வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்தது. இந்நிலையில் கேரளாவில் மழை குறையும் நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை முதலே தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. பல இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பெய்யும் மழை, பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக உள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரெய்ன்ஸ் எனும் தனியார் வானிலை அமைப்பு, இன்றும் நாளையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது, காற்றின் நிலையற்ற தன்மை வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திராவிற்கு சாதகமாக உள்ளது என்றும் சென்னை ரெய்ன்ஸ் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் பகல் நேரங்களில் மேக மூட்டமாக காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை ரெய்ன்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலைய மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.