எவரெஸ்ட் சிகரம் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்… 6 பேரின் கதி என்ன?

நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 5 பேரை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், காத்மாண்டுக்குத் இன்று காலை திரும்பிக் கொண்டிருந்தது. காலை 10 மணிக்கு புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் 10:15 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

மனாங் ஏர் ஹெலிகாப்டர், 9N-AMV என்ற அந்த ஹெலிகாப்டரை கேப்டன் சேட் குருங் என்பவர் இயக்கினார். சொலுகும்புவில் உள்ள சுர்கி என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்களில் ஹெலிகாப்டரின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

2026க்கு குறி வைக்கிறாரா விஜய்? பனையூர் வீட்டில் நிர்வாகிகளுடன் நடக்கும் முக்கிய மீட்டிங்!

ஆல்டியூட் என்ற ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இந்நிலையில் பகஞ்சே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலையால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள் மற்றும் கேப்டனின் நிலைமை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மீட்பு குழு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது.

கொட்டித்தீர்க்கும் கனமழை… ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. அதிகரிக்கும் பலி… இன்றும் ரெட் அலர்ட்!

விமானத்தில பயணித்த வெளிநாட்டு பயணிகளும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து நடப்பது புதிது அல்ல. மலைகளால் சூழ்ந்த நேபாள நாட்டில் மோசமான வானிலையின் காரணமாக மலைகள் மீது மோதி விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.