சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்கு குட் நியூஸ்: தரிசனத்துக்கு முந்துங்க!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த பக்தர்கள் வலம் வருவர். மற்ற கோயில்களைப் போல் நினைத்த நேரத்தில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து விடமுடியாது.

ஒவ்வொரு மாத பிறப்பின் போதும் சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கபட்டு பூஜைகள் செய்யப்படும். அந்த வகையில் ஆடி மாத பூஜைக்காக நாளை (ஜூலை 16ஆம் தேதி) மாலை 5.30 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது.

ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை 5 நாள்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற உள்ளது. அதேபோல் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும். இந்த நாள்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரீசன் டீம் எடுக்கும் சர்வே: வேட்பாளர்களை தேர்வு செய்யும் ஸ்டாலின் – மாறும் திமுக தேர்தல் வியூகம்

பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து ஆவணி மாத பிறப்பு பூஜைக்காக ஆகஸ்ட் 16ஆம் தேதி நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலும் சபரிமலையில் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி திருவோணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது. திருவோணம் திருவிழாவிற்காக ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காலம் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 27ஆம் தேதி அன்று மண்டல பூஜை நடைபெறும். அதன் பின்னர் நடை அடைக்கப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும். 2024ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.