புதுசு, புதுசா மாறும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… மெகா சம்பவத்திற்கு ரெடியான இந்திய ரயில்வே!

இந்திய ரயில்வே துறையில் இன்றைய தேதிக்கு ஹாட் டாபிக் என்றால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தான். செம ஸ்பீடாமே, நல்லா சொகுசா பயணிக்க முடியுமாமே, எல்லாம் லேட்டஸ்ட் டெக்னாலஜியாம். இப்படியான பேச்சை பயணிகள் பலரிடம் கேட்க முடிகிறது. விமான டிக்கெட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் சொகுசான மற்றும் விரைவான பயணத்தை விரும்புவோர் வந்தே பாரத் ரயில்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்இதுவரை 25 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் சென்னைக்கு மைசூரு, கோவை என இரண்டு சேவைகள் கிடைத்துள்ளன. இந்த ரயில் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் (ICF) ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.இந்திய ரயில்வே திட்டம்வந்தே பாரத் ரயில் சேவைகளை பொறுத்தவரை பெரும்பாலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் சில இடங்களில் ஆதரவு குறைவாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. இவற்றை எல்லாம் சமாளித்து இந்திய ரயில்வே அடுத்தடுத்த படிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை முன்வைத்து சென்னையில் சிறப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சென்னை ஐ.சி.எஃப் நிகழ்ச்சிஅதாவது, சென்னையில் உள்ள சர்வதேச மையத்தில் “Manufacturing Excellence The Vande Bharat Story” என்ற பெயரில் இந்தியாவின் முதல் செமி ஹை ஸ்பீடு ரயிலின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐ.சி.எஃப் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா, இந்திய ரயில்வே துறை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
அதிவேகம், நவீன பெட்டிகள்வேகம், பாதுகாப்பு, சவுகரியம் என அனைத்து விதமான விஷயங்களிலும் சமரசமின்றி பக்காவான ரயிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸை வடிவமைத்துள்ளோம். தற்போதைய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இதை மேம்படுத்தி அலுமினிய உடல் அமைப்புடன் உருவாக்கி 200 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
​உள்நாட்டு தயாரிப்புஇதை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மக்கள் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கின்றனர். Make in India திட்டத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் உள்ள 87 சதவீத உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆக்ஸில், சக்கரங்கள் என 13 சதவீதம் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம்.
​புதிய அறிவிப்புகள்சர்வதேச தரத்தில் சொகுசான பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கியிருக்கிறோம். இன்னும் பொறுத்திருந்து பாருங்கள். தரமான சம்பவங்கள் காத்திருக்கின்றன. கூடிய விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள், வந்தே பாரத் மெட்ரோ, வந்தே பாரத் புறநகர் ரயில்கள், வந்தே பாரத் சரக்கு ரயில் உள்ளிட்டவை பயன்பாட்டிற்கு வரும்.
​வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்சமீபத்தில் தான் 20 ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தேவை என்று இந்திய ரயில்வே துறை ஆர்டர் கொடுத்துள்ளது. கூடவே வந்தே பாரத் சரக்கு ரயில் பட்டிகள் தயாரிக்கும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளோம். மேலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.