பெண் குழந்தைக்கு தாயான நக்ஷத்திரா

சின்னத்திரை நடிகையான நக்ஷத்திரா 'யாரடி நீ மோகினி', 'வள்ளித் திருமணம்' ஆகிய சீரியல்களின் மூலம் பிரபலமானார். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காதலர் விஸ்வாவை கரம்பிடித்த நக்ஷத்திராவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற நக்ஷத்திராவுக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்வும் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நக்ஷத்திரா குழந்தையின் பிஞ்சு விரல்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை நக்ஷத்திராவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.