ஸ்டாலின் கூட்டும் அமைச்சரவை கூட்டம்: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட உள்ளன?

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர்

தலைமையில் ஜூலை 22ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகியுள்ளது.

முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதிருப்பின் அவ்வப்போது அமைச்சரவை கூட்டப்படும். அந்த வகையில் ஜூலை 22ஆம் தேதி கூட்டப்பட உள்ள அமைச்சரவை கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

அமலாக்கத்துறை சோதனை நடத்தி கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மகன் கௌதமசிகாமனி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணையும் நடைபெறுகிறது. அடுத்தடுத்து தமிழக அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதன் பின்னணி குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு !

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் நிலையில் அது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றுமாறு குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆளுநரை மாற்றுவது தொடர்பாக திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் நாடாளுமன்றத்திலும் பேச உள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.