சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: கொட்டப் போகும் மழை! – வேறு எந்த ஊர்களுக்கு வாய்ப்பு?

ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா, கோவா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெள்ளத்தால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரே தொடர்ச்சியாக மழை இருக்கும். இருந்தபோதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பிறமாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூரில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் அவதி

ஜூலை 25ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.