யாரை பார்த்து அடிமைன்னு சொன்னீங்க? திடீரென சீறிய எடப்பாடி பழனிசாமி

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி முதலமைச்சர்

மக்களை ஏமாற்றுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர்

குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் கோரணம்பட்டி ஊராட்சியில் அதிமுக கொடியேற்றி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும் கட்சி அதிமுக தான். அம்மா அவர்கள் எனக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டிலேயே அதிக தார்சாலைகள் இருக்கும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி காட்டினேன்.

அதன்பின்னர் எனக்கு நெடுஞ்சாலை, பொதுப் பணித்துறை ஆகிய இரு துறைகளை வழங்கினார்கள். பொதுப்பணித்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு, அந்த வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் சூழலை உருவாக்கினேன். இதனால் விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாக வந்தது.

ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது

ஆனால் இன்றைய திமுக ஆட்சியில் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். காவிரி நீர் வரவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி மக்களை ஏமாற்றி வருகிறார். திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. பெங்களூர் எதிர்கட்சிகள் கூட்டத்துக்கு சென்ற ஸ்டாலின் தமிழக பிரச்சினைகள் குறித்து பேசவில்லை.

முதல்வர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார் என்று கூறுகிறார். நாங்கள் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டோம். நீங்கள் தான் கொள்ளை அடித்த பணத்தை காப்பதற்காக அடியமையாக இருக்கிறீர்கள்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதே காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்த்தை 24 நாள்கள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கினார்கள். ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களோ மக்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை.

தமிழ்நாட்டில் விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது. அதற்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன? நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது விலைவாசி உயர்வை குறைப்பதற்காக பக்கத்து மாநிலங்களில் பொருள்களை வாங்கி நிலைமையை சீராக்கினோம்” என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.