அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை மையம் வார்னிங்!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் கொட்டும் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, அதன்படி நீலகிரி மற்றும் கோவை மலைப் பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோடை கனமழை கொட்டி தீர்த்தது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 29ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கை கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்றும் இதன் காரணமாக இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகப்பட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.