ஓபிஎஸ் பாஜகவுடன் இருக்க விரும்பினால்.. நான் தலையிட முடியாது.. நறுக்கென சொன்ன சசிகலா

கோவை:
ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் இருக்க விரும்பினால் நான் அதில் தலையிட முடியாது என்று

கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிமுகவை அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்ட போதிலும், அக்கட்சி மூன்று துண்டுகளாக உடைந்திருக்கிறது. எடப்பாடி அணி,

அணி, தினகரன் அணி என சிதறி இருக்கிறது அதிமுக. அசுர பலத்துடனும், அசைக்க முடியாத கூட்டணியுடனும் இருக்கும் திமுகவை, பிளவுப்பட்ட அதிமுக வீழ்த்துவது என்பது கனவிலும் நடக்காது என்பதை பாஜக உணர்ந்துள்ளது.

இதனால் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி பாஜக தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக சசிகலா அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், கோவையில் தனது முதல் சுற்றுப்பயணத்தை சசிகலா இன்று தொடங்கினார். அப்போது திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடி பேசினார் சசிகலா. ஆனால் அதிமுகவையோ, எடப்பாடி பழனிசாமியையோ அவர் விமர்சிக்கவில்லை.

இதையடுத்து, கோவையில் செய்தியாளர்களை இன்று இரவு சசிகலா சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் பாஜக தான் எதிர்க்கட்சி என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறுகிறாரே என நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த சசிகலா, “என்னை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுகவை தான் மக்கள் எதிர்க்கட்சியாக பார்க்கின்றனர்” என்றார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டேன் என ஓபிஎஸ் சொல்கிறாரே.. என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “அதிமுகவின் அனைத்து அணிகளையும் ஒற்றுமைப்படுத்துவதே என்னுடைய பணி. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் நான் எவ்வாறு தலையிட முடியும்?” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.