மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் சன் லூயிஸ் ரியோ கொரொடா. இங்குள்ள மதுபான விடுதி ஒன்றில், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வெளியேற்றப்பட்ட நபர் ஒருவர், அந்த விடுதிக்கு தீ வைத்துள்ளார். இதில் 4 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement