தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க (East Coast Road Expansion) திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. அதாவது, மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மொத்தம் 697 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 24,435 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம்இதில் ஒருசில பகுதிகளின் விரிவாக்கப் பணிகள் மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரிக்கு இடையில் அமைந்துள்ள ஒடியூர் ஏரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் அங்கு எந்த ஒரு கட்டுமானப் பணிகளோ அல்லது மேம்பாட்டு திட்டங்களோ மேற்கொள்ள முடியாது.ஒடியூர் ஏரியும், சிக்கலும்இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக (Eco Sensitive Zone) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒடியூர் ஏரியை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்கிறது. 10 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. பாசன டேங்குகள், விவசாய நிலங்கள், நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்டவற்றில் இருந்து ஒடியூர் ஏரிக்கு நல்ல தண்ணீர் வந்த வண்ணம் இருக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கைஇது ஈரநில சூழலியல் மண்டலத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. முட்டுக்காடு ஏரியை விட சற்று பெரியது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல தண்ணீர் கிடைக்க இது ஒரு முக்கியமான காரணம். மேலும் சதுப்பு நிலம், மணல் மேடு, உப்பு நீர் படிமம் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஒடியூர் ஏரிக்கு உள்ளே மஞ்சள் நிற மார்க்கர் கற்களை கொண்டு வந்து அடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் (NHAI) நடவடிக்கை எடுத்தது.
மீனவ சமூகத்தினர் புகார்இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர் மீனவ சமூகத்தினர் உடனே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) புகார் அளித்தனர். அவர்கள் ஒடியூர் ஏரி அமைந்துள்ள பகுதியில் கட்டுமானம் நடைபெறும் இடைக்கால தடை விதித்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டனர். அதன்பிறகு அப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டன. சுமார் 6 மாதங்கள் ஆன நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தனது டிசைனில் பெரிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
மாற்று ஏற்பாடுகள்அதன்படி, ஒடியூர் ஏரி அருகே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்தது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஆய்வு செய்ததில் வலது புறப் பகுதியை விட்டு விட்டு, இடதுபுறத்தில் 3 முதல் 4 மீட்டர் அளவிற்கு கூடுதல் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
விரைவில் பணிகள் தொடக்கம்அதுமட்டுமின்றி ஏரியில் விதிமீறல்கள் ஏதும் நடைபெறக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் தடுப்பு சுவர் ஒன்றை கட்டி எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒடியூர் ஏரி அருகே வழித்தடம் மட்டுமே மாறுகிறது. ஏரியில் இருந்து சில 100 மீட்டர்கள் தள்ளி 4 வழிச்சாலை அமைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.