Dhanush: அந்த கேரக்டரை நான் பண்ணவே மாட்டேன் என்றேன்..ஆனால்..வெளிப்படையாக பேசிய தனுஷ்..!

தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய திரையுலகிலேயே முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்று வெற்றிபெற்ற தனுஷ் தற்போது தெலுங்கு திரையுலகிலும் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து தெலுங்கிலும் தனுஷிற்கு தனி மார்க்கெட்டை உருவாக்கி தந்துள்ளது. இதையடுத்து தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளதை அடுத்து தன் ஐம்பதாவது பட வேலைகளை துவங்கியுள்ளார்.

தனுஷ் – செல்வராகவன் கூட்டணி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கின்றார் தனுஷ். பா.பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தன் ஐம்பதாவது படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தனுஷின் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகிவரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Vidaamuyarchi: அஜித்தின் கதை – திரைக்கதையில் உருவாகும் படம்..சத்தமே இல்லாமல் AK செய்யும் சம்பவம் ..!

பீரியட் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட இருக்கின்றது. இதையடுத்து தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் நடித்ததை பற்றி வெளிப்படையாக பல விஷயங்களை பேசியுள்ளார். அவர் கூறியதாவது, புதுப்பேட்டை கதையை செல்வராகவன் என்னிடம் சொன்னபோது நான் நடிக்கமாட்டேன் என்றேன். அவ்வளவு கனமான கதாபாத்திரத்தை என்னால் தாங்க முடியுமா என்ற பயம் எனக்கு இருந்தது.

புதுப்பேட்டை உருவான விதம்

மேலும் என் உடல் வாகிற்கு ஒரு டான் கதாபாத்திரத்தில் நடித்தால் செட் ஆகுமா என்ற பயமும் இருந்தது. ஆனால் செல்வராகவன் தான், உனக்கு கண்டிப்பாக செட் ஆகும் என்றார். மேலும் எழுத்தாளர் பாலமுருகன் என்னை அழைத்து, நிஜமான டான்களை நீ பார்த்துருக்கிறியா, அவர்கள் வாட்ட சாட்டமாக இருக்கமாட்டார்கள். உன்னை போல ஒல்லியாகத்தான் இருப்பார்கள்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

எனவே இந்த ரோல் உனக்கு செட்டாகும். கவலைப்படாமல் இப்படத்தில் நடி என்றார். அதன் பிறகே எனக்கு புதுப்பேட்டை படத்தில் நடிக்கும் நம்பிக்கை பிறந்தது என்றார் தனுஷ். இதனை தனுஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.