Who owns the party: Election Commission orders Sharad Pawar, Ajit Pawar | ஆவணங்களை தாக்கல் செய்ய சரத்பவார், அஜித்பவாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி: தேசியவாத காங்., கட்சி தொடர்பாக சரத்பவார், அஜித்பவார் ஆகிய இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி மூத்த தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் , முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்துதுணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்கள் எட்டு பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில் கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு உள்ளதாக அஜித் பவார் கூறியுள்ளார். தொடர்ந்து கட்சி , அதன் சின்னம் தனக்கே சொந்தம் என அஜித்பவார் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ள. இது தொடர்பாக சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.