சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்… ரெடியாகும் மின்னல் வேகப் பயணம்… டெல்லி கொடுத்த மெகா அப்டேட்!

புல்லட் ரயில் என்றாலே சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான் நினைவில் தோன்றும். இந்தியாவில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற ஏக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. மும்பை டூ அகமதாபாத் வழித்தடத்தில் 508 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்க அடித்தளம் போடப்பட்டு விட்டது.

மும்பை டூ அகமதாபாத் புல்லட் ரயில்ஜப்பான் நாட்டின் நிதியுதவி உடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் காரணமாக கால தாமதம் ஆன நிலையில் தற்போது பிரச்சினைகள் ஓரளவுக்கு முடிந்து பணிகள் வேகமெடுத்துள்ளன. வரும் ஆகஸ்ட் 2026ல் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கலாம்.​மழைக்கால கூட்டத்தொடர்இந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையை மும்பை – அகமதாபாத் வழித்தடம் பெறும். இதையடுத்து பிற நகரங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும். இதற்காக மத்திய அரசு தற்போதே திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இதுதொடர்பான விவரங்கள் நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலாக கிடைத்துள்ளன.
​ரயில்வே துறை அமைச்சர் பதில்அதாவது, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள தகவலில், ரயில்களின் வேகத்தை கூட்டும் பணிகள் இந்திய ரயில்வே துறையால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஐஐடி மும்பையின் உதவியுடன் பேசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் சேவையாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைஅதிவேக ரயில் சேவையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் பங்கு மிகவும் முக்கியமானது. இதுவரை 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புல்லட் ரயில் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், தற்போது மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) திட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் களப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
​தேசிய ரயில் திட்டப் பணிகள்இதில் ஜப்பான் அரசு நிதியுதவி அளித்து கைகொடுத்துள்ளது. வருங்காலத்தில் தேசிய ரயில் திட்டத்தின் (National Rail Plan) கீழ் புதிதாக சில வழித்தடங்களிலும் புல்லட் ரயில்களை விட திட்டமிடப்பட்டுள்ளது. அவை, டெல்லி டூ வாரணாசி, டெல்லி டூ அகமதாபாத், மும்பை டூ நாக்பூர், மும்பை டூ ஹைதராபாத், சென்னை டூ மைசூரு, டெல்லி டூ அமிர்தசரஸ், வாரணாசி டூ ஹௌரா ஆகியவை ஆகும்.சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்இதில் சென்னை டூ மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டில் உள்ளது. இது பெங்களூரு வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புல்லட் ரயிலும் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும் எனத் தெரிகிறது. இந்த புல்லட் ரயில் 2051ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் தென்னிந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.