காங்டாக்: அரசு பணியாற்றும் மகளிருக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங் டவாங் அறிவித்து அம்மாநில பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
ஐஏஎஸ். ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் பேசுகையில் இத்தகவலை தெரிவித்துள்ளார். ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கும் அறிவிப்பு விரைவில் வரும் என்றும், இது போன்ற விடுப்பு தாயையும், குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திட உதவும் என்றார். உயர் அதிகாரிகள் மாநில வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
பேறுகால நலச்சட்டம் 1961ன் படி பெண்களுக்கு 6 மாத விடுப்பு நடைமுறையில் உள்ளது. சிக்கிமில் ஓராண்டு விடுப்பு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பிற மாநிலங்களும் இந்த விடுப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதேநேரத்தில் தமிழகத்தில் 2021ம் ஆண்டில் இருந்தே ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement