டெல்லி: தமிழ்நாட்டில் என்எல்சி நிறுவனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி. சிவி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று 7வது நாளாக, மணிப்பூர் விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில், என்எல்சி நிர்வாகம், 25 ஆயிரம் ஏக்கர் […]
