3 soldiers killed in terrorist attack | பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் பலி

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மூன்று ராணுவ வீரர்கள்பலியாகினர்.

ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர்கள் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் ராணுவ வீரர்கள் மீது சுட்டனர். இதற்கு நம் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று வீரர்களும் பரிதாபமாகஉயிரிழந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.