திருப்பதி கோயில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம்

அமராவதி: ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து 2-வது முறையாக இப்பதவியை வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி தொகுதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி, புதிய அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருணாகர் ரெட்டி ஏற்கெனவே திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார். மேலும் உள்ளூர்காரர் என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என கருதப்படுகிறது.

வரும் 16-ம் தேதிக்குள், அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது குறித்து முதல்வர் ஜெகன் ஆலோசித்து வருகிறார்.

இதில் தமிழகம், கர்நாடகம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அந்தந்த மாநில அரசுகளின் சிபாரிசின் பேரின் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் இருந்து அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவிருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.