தமிழ்நாடு முழுக்கவுமே சம்பவம் இருக்காம்… நல்ல சேதி சொன்ன வெதர்மேன்!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இருப்பினும் தமிழகத்தின் சில இடங்களில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

இந்நிலையில் இன்று மாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகலில் வெளுத்து வாங்கிய மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், சிறுசேரி, கேளம்பாக்கம், படூர் முதல் தாம்பரம் வரை பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடல் காற்றின் உதவியால் மேகங்கள் பூத்துக் குலுங்குவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன்,

விரைவில் நகர பகுதிகளில் மழை பெய்ய தொடங்கும் என்றும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிரும் இன்று நல்ல மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் நாடு வெதர்மேனின் இந்த பதிவு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமகா தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியபகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.