மகப்பேறு விடுப்பு கால ஊதியத்தை திரும்பப்பெறும் உத்தரவுக்கு தடை… உயர்நீதிமன்ற கிளை அதிரடி!

மருத்துவ தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பொது சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் பொருந்தாது என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. மேலும் அவ்வாறு ஊதியம் வழங்கப்பட்டிருந்தால் அதனை மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கையை சேர்ந்த சந்தான லெட்சுமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தேசிய சுகாதார திட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்பு கால ஊதியத்தை திரும்பப் பெறும் தேசிய சுகாதார அமைப்பின் தமிழக இயக்குநர் ஷீலா பிரபாகர் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை முன்மைச் செயலாளர் மற்றும் தேசிய சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்யயும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.